RSS

முடியாதது முடியும்

படர்ந்து கிடக்கும் கடலை
பாயில் சுருட்டி மகிழ்ந்தேன்
வெள்ளை காகக் கூட்டம்
வானில் பறக்கக் கண்டேன்
பார்வைக்குப் படாத அணுவின்
பிரசவ வலியைக் கேட்டேன்
மங்கை சூடா தாமரையை
மணலில் நட்டு வளர்த்தேன்
வின்மீகளைக் கையில் பிடித்து
விளையாடி நேரம் கழித்தேன்
செவ்வாயில் பாய் விரித்து
சோளப் பொரி தின்றேன்
இரவின் கருமை நீங்க-வானில்
வெள்ளை அடித்து பார்த்தேன்
வானவில்லில் படுக்கை விரித்து
வசந்தமாக நானும் உறங்கினேன்
தவளை தன் குஞ்சுகளுக்குத்
 தாலாட்டுப் பாடக் கேட்டென்
---நித்தியவாணி---

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
மிக அழகான கற்பனை
அளவான வார்த்தைப் பிரயோகம்
பதிவுலகிற்கு புதிய கவிஞரின்
வரவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்த்து...

ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan) சொன்னது…

நான் இதுவரை படித்திடாத அருமையான கற்பனை வரிகள் மிகவும் அருமை.

பெயரில்லா சொன்னது…

chinna chinna aasai pattu polave irukkiruthu