RSS

மிருதங்கம்.

மிருதங்கம் (தண்ணுமை) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

இதுமிருத்அல்லது ஒருவித கல்லின் தூளினை முக்கிய அங்கமாக உடையது. அந்த கிட்டாங் கல்லின் மண்ணை பசை சேர்த்து தோலினிடத்தே வட்டமாக பூசி ஒழுங்கு செய்வதால் அதனின்று ஆதார சுருதி ஒலிக்கின்றது. அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதர்க்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது. இதில் முத்திரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களின் பகுதியில் குச்சிப்புல்லைத் தட்டி சுருதியைச் சேர்த்துக் கொள்வர். தம்புராவைப்போல் இதுவும் பாடுவோருக்குச் சிறந்த துணையாக அமைகின்றது. தம்புராவானது பாடுவோரின் சுருதி சுத்தத்தையும், சுரத்தானங்களுக்கு அப்பாலாய் விளங்கும் அந்தர அலகு நுட்பத்தின் அறிவையும் விளக்க, மிருதங்கமானது பாட்டின் லய சுத்தத்தையும் லய வின்னியாச நுட்பங்களையும் எடுத்து விளக்க உதவுகின்றது. பாடிவரும் பாட்டுக்களின் தாள அமைப்புகளை லயவிரிவுகள் எடுத்து உணர்த்தி வரும். எடுத்துக் கொண்ட கால பிரமாணம் தவறி வேகமாய் விடாமலும், விளம்பமாய் விடாமலும் தடுத்து வருவது இம்மிருதங்கத்தின் முக்கிய பயன் எனலாம். இத்தகைய குணச் சிறப்பால் மிடற்றிசைவாணர்களின் பாட்டை இதுமிகமிகப் பெருமைப்படுத்தும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தம்புரா

இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவது தந்தியில் வருவது அந்த ஆதார சட்ச சுரத்திற்குத் தாழ்ந்த பஞ்சம சுரத்தை ஒலிப்பதாக சுருதி செய்தல் வேண்டும். கடைசியில் உள்ள நான்காம் தந்தியில் ஆதார சட்ச சுரத்திலும் தாழ்ந்த ச-ஒலிப்பதாய்ச் சுருதி செய்தல் வேண்டும். எனவே தந்திகளை மீட்டி வரும்போது அவை
 “ ப [தாரஸ்தாயி low octave)]-ஸ-ஸ-ஸ [தாரஸ்தாயி low octave)]-” என்று ஒலிப்பதாய் இருக்க வேண்டும்.

இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும். இதற்கு “சீவா” என்று பெயர். இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும். இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது  “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும். தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.

 தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ  என்பதை இசைப்போர் தெரிந்துக்கொண்டு பாடி வரலாம். பாடுவோர் பாடி நிருத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதால் அவர் பாடிக்கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உயர்ச்சியையும் அது உண்டாக்குகின்றது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸ்வர தாள குறிப்புகள்

தாளத்தின் எண்ணிக்கை ஒன்றுக்கு நான்கு (4) ஸ்வரங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

’           = இது ஒரு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’          = இது இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும்

’’’         = இது மூன்று அட்சர காலத்தைக் குறிக்கும்.

 .           = இது ஸ்வரத்தின் மேல் இருந்த்தால் “ தாரஸ்தாயி” என்றும்
                 ஸ்வரத்தின் கீழ் இருந்த்தால் “மந்திரஸ்தாயி” என்றும் குறிக்கும்.

*           = இது வர்ணத்தின் ஆரம்ப இடத்தைக் குறிக்கும்.

-            = இது ஸ்வரங்களைப் பிரித்துப் பாடும் இடத்தைக் குறிக்கும்.

 |           = இது தாளத்தின் பிரிவைக் குறிக்கும்

||           = இது தாளத்தின் முடிவைக் குறிக்கும்.

2, 3, 4,  = இந்த நம்பர்கள் எழுத்தின் பக்கத்தில் வந்தால் அந்த எழுத்தின்
                சப்தத்தைக் குறிக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழிசைக் கருவி - பறை (தப்பு)

தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS