RSS

இந்துஸ்தானிய இசை மேதை தான்சேன்

இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன். இவரின் இயர்பெயர் ராம்தனு பாண்டே. இவர் அக்பரின் அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவர் சிறு வயதிலேயே இசையில் வல்லமைப் பெற்றவராக இருந்தார்  என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 
அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த பழங்களை சாலையில் செல்பவர்கள் பறித்தது போக அவர்களுக்கு பயன் கிடைக்காத நிலை இருந்தது. தோட்டத்திற்குக் காவலாக இருக்கும்படி தான்சேனை அவன் தந்தை அனுப்பினார். சிறுவனாக இருந்தபோதும் தான்சேன் ஒரு  யுக்தி செய்தான். அவன் தோட்டத்தில் செடி மறைவில் ஒளிந்து கொண்டு ஆண் புலியைப் போல உறுமினான். அக்குரல் தத்ரூபமாக இருந்ததால் தோட்டத்தில் புலி இருக்கிறது என்று பயந்து நாளடைவில் யாருமே அந்தப்பக்கம் வருவதே இல்லை. ஒரு நாள் இரண்டு சாதுக்கள் அவ்வழியே வந்தனர். அவர்களைக் கண்ட தான்சேன் புலியைப் போல உறுமினான். ஒரு சாது ஓடிவிட்டார்.ஹரிதாஸ் எனும் சாது மட்டும் தைரியமாகத் தோட்டத்திற்குள் நுழைந்து பார்த்தார். தான்சேன் செடி மறைவில் இருப்பதைக் கண்டார். அவருக்கு தான்சேன் திறமையில் அபாரப் பற்று ஏற்பட்டது. எனவே தனக்குத் தெரிந்த இசைக்கலையை அவனுக்கு அன்று முதல் புகட்ட ஆரம்பித்தார். அவன் ஒப்பற்ற இசை மேதை ஆகி விட்டான். ஒரு கதையாய்ப் போய்விட்ட பிறகும் கூட தான்சேன் பாட ஆரம்பிக்கும்போது புலியைப்போல உறுமாமல் துவங்குவது இல்லை. அந்த உறுமலே தான்சேனின் குரு வணக்கம்.  (ந.பிச்சமூர்த்தி கதைகள் எனும் நூலிலிருந்து.)
இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கருநாடக இசைக் கலைஞர்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.
தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அரண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் இஸ்லாமியத்துக்கு மதம் மாறினார். தான்சேன் தனது பாடலினாலேயே விளக்குகளை எரிய வைக்கும் திறமைப் பெற்றவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.  அவரது மகள் தன்னுடைய இசையின் மூலம் மழையை  வரவைத்ததாகவும் சொல்கிறார்கள்.
பின்னாளில் இவரது இசையைப் பற்றிக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர் தான்சேன் அவர்களை தனது அரசவையிலேயே இருக்கச் சொல்லி அவரது இசையிலே மயங்கியதாகவும் தான்சேன் அக்பரது மகள் மெஹருன்னிசாவை மணந்ததாகவும் கூறப்படுகிறது.
சூஃபி பாடல்களை மற்றுமொரு குருவிடம் கற்றுக் கொண்டுஇருக்கிறார்.  
அந்த குருவின் பெயர் முகம்மது கவுஸ்.  தற்போதுதான்சேன் சமாதி கூட முகம்மது கவுஸ் அவர்களுடைய சமாதிஇருக்கும் இடத்தின் பின் பக்கமே இருக்கிறது. 




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS