RSS

Pandavas Fusion Band


உலகம் மட்டுமின்றி இந்த அண்ட சராசரமே இசையுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதே இசை. ஓம் என்ற பிரணவ அதிர்வினால் பிறந்ததே இசை. மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, கர்நாடக இசை என்று பல வகைகள் உள்ளன. மனித வாழ்வில் இசை இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது. நம் தினசரி வாழ்வில் நாம் செய்யும் பல வேளைகளில் இசைக் கலந்திருக்கிறது, என்று “pandavas fusion band” இசைக்குழுவின் உறுப்பினரான சித்தார் வித்வான் திரு. கலை கூறுகின்றார்.
ஏழு வித்வான்களுடன் இயங்கி வரும் இந்த ”pandavas fusion band” குழு இந்த ஆண்டு ஜனவரி மாதமே தொடங்கப்பட்டது. இந்த குழுவில் சித்தார் வித்வானக, திரு.கலை, தபலா வித்வானாக டாக்டர். கிரிதரன், acoustic guitar வித்வானாக திரு. அரியனாயகன், box drum வித்வானாக திரு. ரிஷி குமார், புல்லாங்குழல் வித்வானாக திரு. மகேந்திரன், bass guitar வித்வானாக திரு. ஸ்ரீ ராம் மற்றும் percussions வித்வானாக திரு. பால கணபதி ஆகியோர் திகழ்கின்றனர்.
பல வகையான இசைகளை இசைக்க வள்ளவர்களாக இவர்கள் திகழ்கின்றனர். ’இசை என்பது தியானம் (music is meditation)” என்பதே இவர்களின் கொள்கை. மேலும், பல தரப்பு மக்களுடன் இசையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம் என்றும் கூறுகின்றனர். இசையை விரும்பாதோர் உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை முதல், தள்ளாடும் முதியோர் வரை சலிக்காது விரும்பும் ஒரே விஷயம் இசை தான். அதேபோல் இவர்களின் இசையைப் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை என்றும் கூறலாம்.
இதுவரை கிட்டத்தட்ட 20 நேரடி இசைப் படைப்புகளைப் படைத்துள்ளனர் (live concerts) என்பது பெருமைக்குறிய விஷியமே. இசையை உலக அரங்கில் பகிர்வதைத் தங்களின் இலட்சியமாக கொண்டுள்ளனர். தற்பொழுது ஓர் வாத்திய இசை (instrumental) ஆல்பம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் இவர்களுக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் சமர்பனம்.
இறைவன் அருளால் இந்த குழுவை நிறுவ நாங்கள் அதிகம் சவால்களை எதிர்நோக்கவில்லை காரணம் நாங்கள் இசை அன்னைக்குப் பிள்ளைகளாகவும் சகோதரத்தன்மையுடனும் செயல்பட்டு வருகின்றோம் என்று கூறினர். இந்த குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், கட்டொழுங்குடனும், இசையை மட்டுமே முழுமூச்சாகவும், நோக்கமாகவும் கொண்டு தங்களின் குழு வளர்ச்சிக்கு இசையுடன் ஒன்றர கலந்து பாடுபடுகின்றனர்.
தற்பொழுது “pandavas fusion band” குழு ஒர் ஆய்வினையும் நடத்திக்கொண்டு வருகின்றனர். Music therapy எனப்படும், இராகங்களின் மூலம் நோய் தீர்க்கும் முறையை ஆய்வுச் செய்து வருகின்றனர். அடுத்த வருடம் உலக அரங்கில் இசையைப் படைக்க இசைச் சுற்றுலா (world tour concerts) செல்வதாகவும் கூறினர்.
இவர்களின் குழு பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.facebook.com/groups/ThePandavasFusionBand  வலம் வாருங்கள். இவர்களின் இசைக்குழுவை நாட 016 - 3497690 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் வளர்ந்து வரும் இவர்கள் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து உலக அரங்கில் கால் பதிக்க இறைவனை வேண்டுகின்றோம்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசைத் தோற்றம்

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)


ஓசையுலகம் :
கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்கபெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை:
மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்துகொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு:
இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு:
இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கார்டோன்களில் வாழும் யாழ்...

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

கார்டோன்களில் வாழும் யாழ்... (முழுமையா படியுங்கள்)

பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வழொஅதி
தெண்ணிலா மதியம் பொழில் சேருந் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின்கழல் காட்சியாரழல்
அண்ணலாஅ எம்மான் அடைந்தார்க்கருளாயே
--திருஞான சம்பந்தர்--

விளக்கம்:
குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்களர் எனும் திருப்பதியில் கோயில் கொண்டு எழிந்தருளியுள்ள பெருமானே!
யாழைத் திருத்திய சுரம் அமையப் பண்ணிப் பாடி ஆடும் மங்கையர் நிறைந்த திருப்பதியாகிய திருக்களருள்ளும், அன்பர்கள் உள்ளத்திளும் நீங்காது நின்றருளும் ஒப்பற்றவனே...


தமிழிசையில் மூத்த இசைக்கருவியாகத் திகழும் யாழ் இப்பதிகத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது... மேலும், திருஞானசம்பந்தர் அருளிய தேவர பாடல்களுக்கு யாழ் இசையை மீட்டியவர் நீலகண்ட யாழ்பாணர் என்பது குறிப்பிடத்தக்கது... தாழ்ந்த குலத்தில் பிறந்தும் திருஞானசம்பந்தரின் பாடல் பதிகங்களுக்கு யாழிசை மீட்டும் பாக்கியம் கிடைத்தது நீலகண்ட யாழ்பாணருக்கு... இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவரின மக்களின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள வேண்டினார்.. அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார் திருஞானசம்பந்தர். சரியாக யாழ் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு...
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம்...பழம்பெரும் தமிழிசைக்கருவி யாழ் நம் கைவிட்டு போய் விட்டது...   நான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு. வழக்கத்தில் இவ்விசைக்கருவியை கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு... பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழ கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்துகொண்டேன்... இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது. யாழ் மட்டுமல்ல... இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே... அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள்... திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம்... தோண்டி மீட்போம்... :)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வயலின் புகழ் டாக்டர். மணிபாரதி

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

இசைப் பயணம்.

ஐயா டாக்டர் மணிபாரதியுடன் ஒரு சிறிய நேர்காணல்...

கல்விக்கு வாணி, வில்லுக்கு அர்ஜுணன், தாண்டவத்திற்கு தில்லைகூத்தன், என்பதுபோல் வயலினுக்கு டாக்டர். மணிபாரதி என்றும் கூறலாம்.
      புகழ்பெற்ற பாடல்களுக்கு (பல்லிக்கட்டு சபரிமலைக்கு,  மாணிக்க வீணை ஏந்தும், பகவான் சரணம், ஜெய ஜெய தேவி துர்கா தேவி) வரிகள் வடித்த கலைமாமணி வீரமணி சோமு அவர்களின் புதல்வன் தான் டாக்டர். மணிபாரதி. இவருடைய தந்தை ஓர் இசையமைப்பாளர் ஆவார். பிரபல பாடகர் கே. வீரமணி அவர்களின் உடன்பிறந்த சகோதரரும் ஆவார். 
இவருடைய தாத்தாக்கள், திரு குஞ்சேர பாரதிகள் (பிரபலமான மீனாட்சி & முருகன் கீர்த்தனைகளின் பதிவாளர்) மற்றும் திரு கோடீஸ்வர ஐயர் (72 மேளகர்த்தா இராகங்களைக் கொண்டு பாடல்களைப் பதிவுச் செய்தவர்). இசைக் குடும்பத்தில் பிறந்த இவரும் இசையை மூச்சாக கொண்டுள்ளார்.
      5 வயதில் ஒரு பாடகராக தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். தனது சிற்றப்பாவுடன் பல கச்சேரிகளில் பாடியுள்ளார். 13ஆம் வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். வயலின் வித்வானாக தன் தொழிலை மேற்கொண்டார். 1979 ஆண்டிலிருந்து இசைத்துரையில் MSV, இளையராஜா, தேவா, ஏ.ஆர். ரகுமான், மற்றும் வட இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் கீழ் வயலின் வித்வானாக தனது பணியை மேற்கொண்டுள்ளார். 1600 க்கும் மேற்பட்ட படங்களில் பிண்ணனில் வயலின் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஒரியா போன்ற மொழிப் படங்களிலும் இசைச் சேவை செய்துள்ளார்.
      இசையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். இவர் தனது 30 ஆண்டு காலத்தில் 52 நாடுகளில் 8000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வயலின் வாசித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவது இரசிகர்கள் இருக்கிறார்கள். திரையுலகைத் தவிர்த்து பல பக்தி பாடல்களுக்கு இசையமைத்து எஸ்.ஜானகி மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் குரலில் வெளியிட்டும் உள்ளார்.
      மேலும், கே,ஜே, யேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், தி.எம் சௌந்தரராஜன், எஸ்.பி பாலசுப்பிரமணியம், போன்ற புகழ் பெற்ற பாடகர்களின் பாடல்களிகளில் வயலின் இசையைப் பதிவு செய்துள்ளார். கர்நாடக இசை மட்டுமின்றி மேற்கத்திய இசை யுத்திகளைத் தனது இசையில் பயன்படுத்தும் பழக்கம் இவருக்கு உண்டு. இந்தியன் முயூசிக் சிம்பனி (indian music symphony) என்ற concept ஐ தோற்றுவித்தார்.
      மலேசியாவைச் சேர்ந்த படாலாசிரியர் யுவாஜி வரிகளில், சாருலத்தா மணி குரலில் சித்திரமே என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளார். தற்பொழுது, எஸ். ஜானகி மற்றூம் வாணி ஜெயராம் அவர்களின் குரலில் “மூகாம்பிகை அருள் கீதம்” என்ற பக்தி album இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
இவர் இவரின் பணிக்காக பல விருதுகளையும் பெற்றூள்ளார். இவரின் இசைச்சேவையைப் பாராட்டி, மலேசிய இளஞர் கழகம் ’டாக்டர்’ Honorary Doctorate (D.Lit)  பட்டத்தை வழங்கி கௌரவித்தது. மேலும் மார்ச் 2012இல் டுபாயில் இவருக்கு ”வயலின் மாஸ்ரோ”(violin maestro) பட்டத்தை வழங்கி சிறப்புச் செய்தது. இவரின் இசை சேவை மிகவும் அளப்பெரியது.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்துஸ்தானிய இசை மேதை தான்சேன்

இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன். இவரின் இயர்பெயர் ராம்தனு பாண்டே. இவர் அக்பரின் அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவர் சிறு வயதிலேயே இசையில் வல்லமைப் பெற்றவராக இருந்தார்  என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 
அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த பழங்களை சாலையில் செல்பவர்கள் பறித்தது போக அவர்களுக்கு பயன் கிடைக்காத நிலை இருந்தது. தோட்டத்திற்குக் காவலாக இருக்கும்படி தான்சேனை அவன் தந்தை அனுப்பினார். சிறுவனாக இருந்தபோதும் தான்சேன் ஒரு  யுக்தி செய்தான். அவன் தோட்டத்தில் செடி மறைவில் ஒளிந்து கொண்டு ஆண் புலியைப் போல உறுமினான். அக்குரல் தத்ரூபமாக இருந்ததால் தோட்டத்தில் புலி இருக்கிறது என்று பயந்து நாளடைவில் யாருமே அந்தப்பக்கம் வருவதே இல்லை. ஒரு நாள் இரண்டு சாதுக்கள் அவ்வழியே வந்தனர். அவர்களைக் கண்ட தான்சேன் புலியைப் போல உறுமினான். ஒரு சாது ஓடிவிட்டார்.ஹரிதாஸ் எனும் சாது மட்டும் தைரியமாகத் தோட்டத்திற்குள் நுழைந்து பார்த்தார். தான்சேன் செடி மறைவில் இருப்பதைக் கண்டார். அவருக்கு தான்சேன் திறமையில் அபாரப் பற்று ஏற்பட்டது. எனவே தனக்குத் தெரிந்த இசைக்கலையை அவனுக்கு அன்று முதல் புகட்ட ஆரம்பித்தார். அவன் ஒப்பற்ற இசை மேதை ஆகி விட்டான். ஒரு கதையாய்ப் போய்விட்ட பிறகும் கூட தான்சேன் பாட ஆரம்பிக்கும்போது புலியைப்போல உறுமாமல் துவங்குவது இல்லை. அந்த உறுமலே தான்சேனின் குரு வணக்கம்.  (ந.பிச்சமூர்த்தி கதைகள் எனும் நூலிலிருந்து.)
இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கருநாடக இசைக் கலைஞர்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.
தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அரண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் இஸ்லாமியத்துக்கு மதம் மாறினார். தான்சேன் தனது பாடலினாலேயே விளக்குகளை எரிய வைக்கும் திறமைப் பெற்றவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.  அவரது மகள் தன்னுடைய இசையின் மூலம் மழையை  வரவைத்ததாகவும் சொல்கிறார்கள்.
பின்னாளில் இவரது இசையைப் பற்றிக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர் தான்சேன் அவர்களை தனது அரசவையிலேயே இருக்கச் சொல்லி அவரது இசையிலே மயங்கியதாகவும் தான்சேன் அக்பரது மகள் மெஹருன்னிசாவை மணந்ததாகவும் கூறப்படுகிறது.
சூஃபி பாடல்களை மற்றுமொரு குருவிடம் கற்றுக் கொண்டுஇருக்கிறார்.  
அந்த குருவின் பெயர் முகம்மது கவுஸ்.  தற்போதுதான்சேன் சமாதி கூட முகம்மது கவுஸ் அவர்களுடைய சமாதிஇருக்கும் இடத்தின் பின் பக்கமே இருக்கிறது. 




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)


காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)
(19-ஆம் நூற்றாண்டு)

      காவடிச்சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர் அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சென்னிகுளம் என்ற ஊரில் 1865-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை சென்னவ ரெட்டியார்; தாய் ஓவு அம்மாள்.
      இளமையிலேயே இவர் தமிழில் ஆர்வம் கொண்டு இராமசாமி என்ற புலவரிடமிருந்து தமிழ் இலக்கியங்களைப் பயின்று வந்தார். மீனாட்சிசுந்தர கவிராயரும் உதவிப்புரிந்தார். சிலகாலம் உ.வே சாமிநாத ஐயரிடம் நன்னூல் கற்றார். மனப்பாடம் செய்யும் ஆற்றலும் இவரிடம் சிறந்து விளங்கியது.
      ஊற்றுமலை ஜமீன்ந்தார் இருதாலய மருதப்ப தேவர் இவரை ஆதரித்தார். ஜமீந்தார், கழுகுமலைக்குக் காவடி எடுத்த போது, அவருக்காக அண்ணாமலை ரெட்டியாரால் பாடப்பட்டவைகளே காவடிச்சிந்து ஆகும்.
      விநாயகர் துதியுடன் இந்தப் பாடல்கள ஆரம்பிக்கின்றன. இதற்குப் பின் முருகன்மீது சில பாடல்கள் உள்ளன. கழுகுமலை நகர், மலை, கோயில், குளம் ஆகியவையெல்லாம் மற்றப் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. முருகன் மிகவும் உன்னதமான நாயகனாகயும், மனித ஆன்மா அவருடன் ஒன்றிப்பதற்கு விழைவதாகவும்  சித்தரிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் அழகிய மெட்டுக்களைக் கொண்டுள்ளன. செய்யுள் நயம் சிறப்பாக உள்ளது. ஹரிகாம்போஜி, கரகரப்பிரியா, நடனபைரவி, சக்கரவாகம், முகாரி, ஆனந்த பைரவி, செஞ்சுருட்டி முதலிய இராகங்கள் கையாளப்பட்டுள்ளன. “புள்ளிக் கலாபமயில்” (கீழ்லுள்ள காணொலியில் இப்பாடலைக் காணலாம்) போன்ற சிந்துக்களின் இசை மிகவும் பழகிப்போய், “காவடிச்சிந்து மெட்டு” என்றே வழங்கப்படுகின்றது., ஆதிதாளம் மட்டுமின்றி, மிச்ரசாபு, கண்டலகு, திச்ரலகு, ஏகம், ரூபகம் முதலிய தாள வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் “முடுகு” என்ற விரைவாக பாடப்படும் பகுதியும் காவடிச்சிந்தின் ஒரு விசேஷ அம்சமாகும். “செந்தின் மாநகர்” என்று தொடங்கும் பாடலில் அதீத எடுப்பு காணப்படுகிறது. “கண்ணாயிரம்” என்று தொடங்கும் பாடலின் காலப்பிரமாணம் (சதுஸ்ர ஏகம்) வியப்பதற்குரியது; காவடி எடுத்து ஆடுவோர் கால் பெயர்த்து வைப்பதைக் காண்பது போன்ற உணர்ச்சி கேட்போர் உள்ளத்தில் எழும்.
      அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தில் மிகவும் பற்று கொண்டிருந்த மாகவி சுப்பிரமணிய பாரதியார் தானும் சில காவடிச்சிந்துக்களை இயற்றியுள்ளார். அண்ணாமலை ரெட்டியார் “வீரை தலபுராணம்”, “வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்”, “கோமதி அந்தாதி” போன்ற நூற்களையும் படைத்துள்ளார். தன்னை ஆதரித்த ஊற்றுமலை ஜமீந்தார் மீது 300-க்கு மேற்பட்ட பாடல் வரிகளைப்பாடியுள்ளார்.
      அண்ணாமலை ரெட்டியார் உரையாடலில் திறமை உள்ளவர். பிறரைக் கவரும் தோற்றம் பெற்றவர். ஆனால் தன் வாழ்க்கையைத் தக்க வழியில் நடத்திச் செல்லாததால், தன் 26-ஆவது வயதில் காலமானார்.
      காவடிச்சிந்துக்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் காரைக்குடி வீணைச்சகோதரர்கள், மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் முதலானோர். காவடிச்சிந்து முதல் தடவையாக கல்குளம் குப்புசுவாமி முதலியார் அவர்களால் 1904-ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது. டாக்டர் எஸ். இராமநாதன் அவர்கள் காவடிச்சிந்துகளின் உண்மையான மெட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சுரத்தாளக் குறிப்புகளுடன் 1966-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொல்காப்பியரும் இசையும்......

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

தொல்காப்பியர் காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டிற்க்உ முந்தியது என்று அறிஞர் கூறுகின்றனர். இவர் இயற்றிய நூல்- தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள மிகத் தொன்மை வாய்ந்த  இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை உடையதாய் 1610 அகவற்பாக்களைக் கொண்டதாகும்.
     இந்த நூலில் இசை பற்றி பல அறிய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐவகை நிலங்கள், ஐவகை யாழ் வகைகள், ஐவகைப் பறை வகைகள் சுட்டப்பட்டுள்ளன.

நிலம்

இன்ப இசை யாழ்
தொழில் இசை பறை
முல்லை நிலம்

குறிஞ்சி நிலம்

மருத நிலம்

நெய்தல் நிலம்

பாலை நிலம்
முல்லையாழ்

குறிஞ்சியாழ்

மருதயாழ்

நெய்தல்யாழ்

பாலையாழ்
ஏறுகோட்பறை

வெறிய்யாட்டுப்பறை

நெல்லரிகிரிணை

மீன்கோட்பறை

நிரைகோட்பறை / சூறை கோட்பறை


தொல்காப்பியத்தில் யாழ் ஒரு கருப்பொருளாகவும், “யாழின் பகுதி” ஒரு கருப்பொருளாகவும் குறிக்கப்பட்டுள்ளது. யாழ் ஏழு நரம்புகளைக் கொண்ட பெரும் பண்ணையும், யாழின் பகுதி சிறு பண்ணையும் குறித்தது. (முல்லை = காடு;  குறிஞ்சி = மலை;  மருதம்= வயல்;  நெய்தல் =கடல்;  பாலை= வறண்ட நிலம்)

யாழ் (பெரும்பண்)
பாலை
யாழின் பகுதி (சிறு பண்)
முல்லை யாழ்
குறிஞ்சி யாழ்
மருத யாழ்
நெய்தல் யாழ்
செம்பாலை
படுமலைப்பாலை
கோடிப்பாலை
விளரிப்பாலை
முல்லைத் தீம்பாணி
குறிஞ்சிப்பாணி
வைகறைப்பாணி
நுளையர் பாலை

    
மேலே கூறப்பட்டுள்ள 4 பாலைகளுக்குரிய இன்றைய இராகங்கள் முறையே அரிகாம்போதி, நடபைரவி, கரகரப்பிரியா, தோடி என்பவையாகும்.
     தொல்காப்பியம் பல்வேறுவகை இசைப்பாடலைகளை விளக்குகிறது. (கலிப்பாடல், பரிபாடல், தேவபாணி, வெண்பா, ஆசிரியம், பண்ணித்து முதலியவை). மேலும் ஒலிகள் பிறக்கத் துணைச் செய்யும் உறுப்புகளை விரிவாக வகைப்படுத்திக் கூறுகிறது. நாவின் அசைவாலும், உதடுகளைக் குவிப்பதாலும், விரிப்பதாலும் இசை ஒலிகள் தோன்றுவது விளக்கப்பட்டுள்ளது. அடிவயிற்றினின்றி இசை ஒலி எழும்ப வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. துள்ளல், தூங்கல், அகவல் ஆகிய ஓசைகளை அமைக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என பாடல் அடிகளின் வகை காலக் கணிதம் மூலம் சுட்டப்பட்டுள்ளது. குறள் – இருமையும், சிந்து – மும்மையும் (திச்ரம்), அளவு – நான்மையும் (சதுச்ரம்), நெடில் – ஐமையும் (கண்டம்), கழிநெடில் – அறுமையும் சுட்டுகின்றன.
     பாணர், கூத்தர், விறலியர், துறை அமை நல்யாழ்துணைமையர், சூத்தர் முதலுயோர் தனித்தும், கூடியு, இசைத் தொழில் நடத்தியதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. முல்லை பண்ணும் குறிஞ்சி பண்ணும் மகிழ்ச்சி சுவைக்கு உரியது என்றும், நெய்தல் பண் இரங்கல் சுவைக்கு உரியது என்றும், மருத பண் வெகுளிச் சுவைக்குரியது என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எஞ்சியுள்ள பெரும் பொழுது, சிறுபொழுதுப் பற்றி தொல்காப்பியத்திற்கு முன்னரே பத்துபட்டிலும், எட்டுத் தொகையிலும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. பாடல்களைக் காலப்படுத்தி பாடும் முறை தொல்காப்பியம் தொடங்கி மரபாக வருகிறது. தொல்காப்பியத்திலுள்ள இசைச் செய்திகளை எல்லாம் தொகுத்தால் ஓர் அரிய இசைநூலை உருவாக்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் இசையின் தொன்மை

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

இக்கட்டுரையை எழுதியவர் அவுஸ்திரேலியாவில் வதியும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.

இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பதால் அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் இலக்கியத்திற்குப் பின்னர்தான் இலக்கணம் தோன்றியிருக்கமுடியும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற அற்புதமான நூல்களும் அழிந்துபோய்விட்டன.

தமிழிசை பற்றிக் கூறுகின்ற நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். அந்நூல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தொல்காப்பியரால் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும்

இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப்பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர், முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்,பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும,; இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார்.

‘அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே’ என்கிறது தொல்காப்பியம். (நூற்பா எண் – 1268)
‘இசைப்பு இசையாகும் என்கிறது’ 793 ஆவது நூற்பா. இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இதன் பொருள்.

அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்

என்று 33 ஆவது நூற்பா சொல்கிறது.

இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் கருத்து.
சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்கள் அனைத்துமே இசைப்பாடல்களே என்று தெரிவிக்கின்றார் பரிமேலழகர்.

திருமாற்கு இருநான்கு செவ்வேள் முப்பத்தொருபாட்டு காடுகாட்கு ஒன்று – மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்

என்கின்ற வெண்பாவின் மூலம், திருமாலைப்பற்றி எட்டுப்பாடல்களும், முருகனைப்பற்றி முப்பத்தியொரு பாடல்களும், காளியைப்பற்றி ஒரு பாடலும், வைகை நதியைப்பற்றி இருபத்தியாறு பாடல்களும், மதுரையைப்பற்றி நான்கு பாடல்களுமாக மொத்தம் எழுபது பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றிருந்தன என்பதை அறிய முடிகிறது. எழுபது பாடல்களின் தொகுப்பான பரிபாடலில் இப்போது கிடைக்கப்பெறுபவை இருபத்தியிரண்டு பாடல்கள் மட்டுமேயாகும். ஏனையவை அழிந்துபோய்விட்டன.

பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன. பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர்.
பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன.

ஒத்தகுழலின் ஒலி எழ, முழவு இமிழ்
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி
ஒத்து அளந்து, சீர்தூக்கி, ஒருவர் பிற்படார்
(பாடல்: 12, வரி 40-43)

என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம்.
மாறுகின்ற பல்வேறு ஒலிகளை உடையது பரங்குன்றம் எனப் பகர்கின்ற பின்வரும் பாடல்களில் இசைதோன்றுவது பற்றியும், குழல் யாழ், முழவு முதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.

ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ
ஒருதிறம், கண்ணார குழலின் கரைபு எழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை ஊத
ஒருதிறம், மண்ணார் குழவின் இசை எழ
ஒருதிறம், அண்ணல நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க
ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
ஒருதிறம், ஆடுசீர் மஞ்சை அரிக்குரல் தோன்ற
மாறுமாறு உற்றனபோல் மாறெதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து (பாடல்: 17, வரி 9-21)
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணிமுழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று (பாடல்: , வரி 33-38)

எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண்,விளரிப்பண் என்னும் பண்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக்கருவிகளைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது. மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை), பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப்பற்றிச் சொல்லப்படுகிறது. இசைக் கலைஞர்களைப்பற்றிச் சொல்லப்படுகிறது.

இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள அற்புதமான நூலாகும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன.
சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுனின்ற எட்டுவகைத் திறன்பற்றி எடுத்தியம்பப்படுகிறது. ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் காலத்திலே கிடைக்கப்பெற்று, அதன்பின்னர் அழிவுற்ற இசை நூல்கள் பல. முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம், யாமளேந்திரர் எழுதிய இந்திர காவியம், ஆதிவாயிலார் எழுதிய பரதசேனாபதீயம், மதிவாணன் எழுதிய நாடகத் தமிழ்நூல் ஆகியவை அவற்றிற் சில என அறியக்கிடக்கின்றது.

அடியார்க்கு நல்லார் காலத்தில் வாழ்ந்தவரான அறிவனார் இயற்றிய பஞ்சமரபு இப்போது கிடைக்கப்பெறும் பழந்தமிழ் இசைநூல்களில் ஓன்றாகும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவரான, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளிலும் பண், குழல், யாழ் என்றெல்லாம் இசைபற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
தென்னாட்டு மக்கள் பாடுவதிலும், பல்வேறு இசைக் கருவிகளை வாசிப்பதிலும், கூத்துக் கலையிலும் மிகவும் திறமையுள்ளவர்கள் என்று நாட்டிய சாஸ்திரம் என்ற தனது நூலிலே பரத முனிவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது தமிழ் இசையைப்பற்றியே என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ந்து வந்தது தமிழ் இசை என்பதும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவருவது தமிழ் இசையே என்பதும் இசை ஆய்வாளர்களது கருத்தாகும்.
பண்டைத் தமிழ் இசை அறிஞர்கள் ஏழுவகை இசைக்குறியீடுகளைக் கொண்டு, நூற்றுக் கணக்கான பண்களைக் கண்டுபிடித்தனர். பலநூற்றாண்டுகளாக அவற்றைப் பயன்படுத்திப் பாதுகாத்துவந்தனர். பன்னாட்டு மக்களும், இசை ஆர்வலர்களும் அவற்றை அறிந்து வியந்தார்கள். கற்று மகிழ்ந்தார்கள்.
அகத்தியர் காலத்தில் 108 பண்கள் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். பண்டைத் தமிழகத்தில் 11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு நல்லார் உரை பதிவுசெய்திருக்கின்றது. முன்னூற்றுக்கும் குறைவான பண்களே இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.

பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசைநூல்கள் தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றன.
சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட இணையற்ற மகுடமெனத் திகழ்கிறது.
தௌளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள 18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.
தேவார திருவாசகங்கள் பல்வேறு பண்களுடனும், தாளங்களுடனும் அமைந்து, தமிழிசையின் மேன்மையைப் பறைசாற்றிக்கொண்டருக்கின்றன. இவை தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே இலங்கிநின்றது தமிழ் இசை மட்டுமேயாகும்.
பன்னீராழ்வார்கள் பாடியருளிய அழகான பிரபந்தங்கள், அருணகிரியாரின் திருப்புகழ், சித்தர் பாடல்கள், கும்மி, சிந்து, குறவஞ்சி, பள்ளு, தெம்மாங்கு, நாட்டுப்பாடல்கள், கீர்த்தனைகள், நல்ல தழிழில் வல்ல புலவர்களால் கொள்ளை கொள்ளையாக எழுதிக் குவிக்கப்பட்டுள்ள தனிப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான பண்ணிசைப் பாடல்கள், நித்தமும் தோன்றிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய இசைப் பாடல்கள், ஆகிய எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு பல்லாயிரம் பல்லாயிரமாக இசைப்பாடல்கள் தமிழ்மொழியில் குவிந்து கிடக்க, அவை மறந்து, நிலை குலைந்து தமிழ் இசை மேதைகளும், நாட்டியக் கலை மேதை களும் கருத்துத் தெரியாத வேற்று மொழிகளிலே பாடுகிறார்கள், பாட்டுக்கு ஆடுகிறார்கள், தமிழ் மொழியைச் சாடுகின்றார்கள், தமிழ் இசைக்குத் திரையை மூடுகின்றார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

sitar and saraswathy veena

Sitar
The Sitar is the most popular of all North Indian instruments. It is classified as a chordophone in the lute family, and is related to the Veena and Zither. Sitars have necks crafted from toon or teakwood. The resonator is carved from a large seasoned gourd. There may be an additional, smaller, gourd resonator attached to the neck. There are a series of arched metal frets, which are tied to the neck with line. These frets may be adjusted to alter the pitch.
There are two sizes of tuning pegs on the Sitar. The larger pegs on the peg box are for the playing strings. The large pegs on the side of the neck are for the chikaries (drone strings). The smaller pegs, on the side of the neck, are for the sympathetic strings. The degree of decoration of these pegs is an indication of the class of instrument. The more decorated the pegs, the higher the quality of instrument.
The number of strings varies, with just fewer than 20 being most common. Three sets of strings run the length of the neck. Two sets run over the top of the movable arched metal frets to the end pegs and one set runs under the frets. The top sets are the main or playing strings and chikaries. The playing strings are fretted to produce melodies. A wire finger plectrum, called a mizrab, is used to pluck these strings. The chidaries are periodically struck to provide a drone or tonic base for the music. The sympathetic strings run under the frets to side mounted pegs. The sympathetic strings are almost never played. As the top strings are plucked the sympathetic strings gently vibrate. They add a soft resonating drone to the rhythms played. With all these strings it may be a surprise to know that only one to four strings are actually played to produce a melody.

Saraswathi veena
  Veena is one of the three modes for expressions of music in India–Veena, Venu (Flute), and Vani (Voice). Veena (vīṇā) is an instrument associated with Goddess of Music and Education: Saraswati. She is hailed as Veena-vaadini, the one who plays this instrument called Veena. This instrument is common in south India and is an important instrument in carnatic sangeet.  It is variously called simply vina, or veena, the "Saraswati" part being implied.
So, Veena gets a high pedestal in the family of Indian musical instrument. There are many types or variants of this instrument based on the size and other factors. Some of them are known as Rudra Veena, Saraswati Veena, Vichitra Veena.
Veena is the oldest and the most authentic of all Indian instruments. The origin of the veena can be traced to India’s Vedic period. This instrument allows all the delicate quartertones and the subtle nuances to be played with accuracy.
The veena’s big bowl is hollow to allow the sound to resonate and travel. The finger- board with its 25 frets are attached to it with enough room for the player to put his/her arm around it to press between the frets to produce the notes. The kudukai or the smaller bowl is also hollow and used to be made out of pumpkin shell in the old days, then out of metal and out of fiber glass in the modern days and also functions as a resonator and also helps the player to rest the veena on his/her lap. The frets are set at distances carefully calculated according to acoustic physics to produce the twelve-tone scale that emerged around the 7th century A.D. The four strings are of different thickness and tuned to different notes in different octaves to allow the veena to have three and a half octaves. The three side strings are strummed at appropriate places to keep control of the rhythm.

            There are few differences between Sitar and Saraswathy veenai… The differences are shown below
Differences between Sitar and Saraswathy veena





Sitar
Saraswathy veenai
No. of Strings
17 - 20
7
No. of main strings
1
4
No. of frets
20
24
Length
127cm
135cm

Sympathetic Strings
Yes. 11-13 strings
No.
Usage of tuning beads
Yes. 1-4 beads
No.
No. of full playable octave
2
3
Total no. of available notes in an octave
10
12
No. of mizrab used
1
1-4
No of Gourd
1 pumkin gourd
2 gourds
Wood Type
teakwood
jackwood and papier mache
Thumba material
Pumpkin

Classical Group
Hindustani
Carnatic
Fret Position
Moveable
Fixed
Fret Mounting
Tied with string around the neck of the sitar
Fixed onto a wax layer on the neck
Playing/holding position
Rest the main tumba on your left foot. The curve of the tumba fits into the curve of the sole of the foot. Rest the right arm on the tumba.  The right knee fits into the concave curve at the joint of the main gourd and the fret-board. The sitar should need no support from your left hand which needs to be free to move up and down the frets. Hold the sitar at an angle of about 45° from the ground.  The sitar should be roughly parallel to your body. When you are playing you should look out straight in front of you at the audience. There should be plenty of space between the sitar and your body.  Sit upright in a relaxed and natural manner on a hard surface to ensure a stable posture. Your spine should be vertical.  Both the shoulders should remain at the same level, in a relaxed position, neither drooping nor raised. Rest your right leg over the knee of the left leg. Your foot should just about touch the floor. Slight variations are required for each person, so just keep trying things out till you feel comfortable.

The performer sits cross-legged on the floor, the small vestigial gourd rests against the left thigh while the main resonator rests on the floor.  The right hand plucks the strings while the left hand frets the instrument.
Bridge material
Wood & Metal (Taalam)
Bone
Devotional Instrument
No.
Yes. (Lord Saraswati)
Origins
Persia
India






























































































sitar 

veenai








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS