RSS

Pandavas Fusion Band


உலகம் மட்டுமின்றி இந்த அண்ட சராசரமே இசையுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதே இசை. ஓம் என்ற பிரணவ அதிர்வினால் பிறந்ததே இசை. மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, கர்நாடக இசை என்று பல வகைகள் உள்ளன. மனித வாழ்வில் இசை இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது. நம் தினசரி வாழ்வில் நாம் செய்யும் பல வேளைகளில் இசைக் கலந்திருக்கிறது, என்று “pandavas fusion band” இசைக்குழுவின் உறுப்பினரான சித்தார் வித்வான் திரு. கலை கூறுகின்றார்.
ஏழு வித்வான்களுடன் இயங்கி வரும் இந்த ”pandavas fusion band” குழு இந்த ஆண்டு ஜனவரி மாதமே தொடங்கப்பட்டது. இந்த குழுவில் சித்தார் வித்வானக, திரு.கலை, தபலா வித்வானாக டாக்டர். கிரிதரன், acoustic guitar வித்வானாக திரு. அரியனாயகன், box drum வித்வானாக திரு. ரிஷி குமார், புல்லாங்குழல் வித்வானாக திரு. மகேந்திரன், bass guitar வித்வானாக திரு. ஸ்ரீ ராம் மற்றும் percussions வித்வானாக திரு. பால கணபதி ஆகியோர் திகழ்கின்றனர்.
பல வகையான இசைகளை இசைக்க வள்ளவர்களாக இவர்கள் திகழ்கின்றனர். ’இசை என்பது தியானம் (music is meditation)” என்பதே இவர்களின் கொள்கை. மேலும், பல தரப்பு மக்களுடன் இசையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம் என்றும் கூறுகின்றனர். இசையை விரும்பாதோர் உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை முதல், தள்ளாடும் முதியோர் வரை சலிக்காது விரும்பும் ஒரே விஷயம் இசை தான். அதேபோல் இவர்களின் இசையைப் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை என்றும் கூறலாம்.
இதுவரை கிட்டத்தட்ட 20 நேரடி இசைப் படைப்புகளைப் படைத்துள்ளனர் (live concerts) என்பது பெருமைக்குறிய விஷியமே. இசையை உலக அரங்கில் பகிர்வதைத் தங்களின் இலட்சியமாக கொண்டுள்ளனர். தற்பொழுது ஓர் வாத்திய இசை (instrumental) ஆல்பம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் இவர்களுக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் சமர்பனம்.
இறைவன் அருளால் இந்த குழுவை நிறுவ நாங்கள் அதிகம் சவால்களை எதிர்நோக்கவில்லை காரணம் நாங்கள் இசை அன்னைக்குப் பிள்ளைகளாகவும் சகோதரத்தன்மையுடனும் செயல்பட்டு வருகின்றோம் என்று கூறினர். இந்த குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், கட்டொழுங்குடனும், இசையை மட்டுமே முழுமூச்சாகவும், நோக்கமாகவும் கொண்டு தங்களின் குழு வளர்ச்சிக்கு இசையுடன் ஒன்றர கலந்து பாடுபடுகின்றனர்.
தற்பொழுது “pandavas fusion band” குழு ஒர் ஆய்வினையும் நடத்திக்கொண்டு வருகின்றனர். Music therapy எனப்படும், இராகங்களின் மூலம் நோய் தீர்க்கும் முறையை ஆய்வுச் செய்து வருகின்றனர். அடுத்த வருடம் உலக அரங்கில் இசையைப் படைக்க இசைச் சுற்றுலா (world tour concerts) செல்வதாகவும் கூறினர்.
இவர்களின் குழு பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.facebook.com/groups/ThePandavasFusionBand  வலம் வாருங்கள். இவர்களின் இசைக்குழுவை நாட 016 - 3497690 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் வளர்ந்து வரும் இவர்கள் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து உலக அரங்கில் கால் பதிக்க இறைவனை வேண்டுகின்றோம்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசைத் தோற்றம்

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)


ஓசையுலகம் :
கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்கபெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை:
மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்துகொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு:
இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு:
இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS